மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்..இஸ்ரேல், ஈரானை கடிந்துகொண்ட ரஷ்யா
மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுவதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் நிதானத்தை கடைபிடிக்குமாறு ரஷ்யா கூறியுள்ளது.
IRGC உறுப்பினர்கள் பலி
இம்மாத தொடக்கத்தில் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் துணைத் தூதரகம் சேதமடைந்தது. அத்துடன் ஈரானின் IRGC உறுப்பினர்கள் 7 பேர் மரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாக இதை கருதுவதாக கூறினார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு இனி பாதுகாப்பு என்பதே இருக்கப்போவதில்லை என தெஹ்ரானில் பேசிய மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி குறிப்பிட்டார்.
ரஷ்யா வலியுறுத்தல்
இந்த நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு இடையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் நிதானத்தை கடைபிடிக்குமாறு ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ''ஏற்கனவே ஸ்திரத்தன்மை அல்லது முன் கணிப்புக்கு பரிசளிக்கப்படாத பிராந்தியத்தை சீர்குலைக்காமல் இருக்க அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்'' என்றார்.
அத்துடன் இரண்டு பரம எதிரிகளுக்கு இடையில் சாத்தியமான மத்தியஸ்தராக ரஷ்யா அணுகப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் நடத்தையை ரஷ்யா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |