உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை... வெளியான புதிய அறிக்கை
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, உக்ரைனில் சுமார் 250,000 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 950,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வாகனங்களையும் வீரர்களையும்
இந்த கோடைக்குள் மொத்த ரஷ்ய உயிரிழப்புகள் 1 மில்லியனைத் தாண்டக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாக்குதல்களை அதிகரித்த போதிலும், ரஷ்யாவின் இராணுவ முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது.
மட்டுமின்றி, உயிரிழப்புடன் போர் ஆயுதங்களின் இழப்பும் பொருந்துவதாக குறிப்பிட்டுள்ளனர். டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஆபத்தான விகிதத்தில் ரஷ்யா இழந்துள்ளது, சில சமயங்களில் 5:1 என்ற விகிதத்தில் பதிவான இழப்பு உக்ரைனுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களைப் பெற்று, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்த போதிலும், ரஷ்யா சிறிய பிராந்திய ஆதாயங்களுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களையும் வீரர்களையும் தொடர்ந்து இழந்துள்ளது.
கார்கிவ் பகுதியில், ரஷ்ய துருப்புக்கள் ஒரு நாளைக்கு வெறும் 50 மீற்றர் வேகத்தில் முன்னேறியுள்ளன. டொனெட்ஸ்கின் அவ்டிவ்கா-போக்ரோவ்ஸ்க் செக்டரில், இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 135 மீற்றராகும்.
வலுவான தற்காப்பு
உக்ரைன் தரப்பிலும் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. 60,000 முதல் 100,000 வரை உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை மதிப்பிடுகிறது. மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 400,000 தொடும் என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், உக்ரேனியப் படைகள் வலுவான தற்காப்பு முனைப்பைப் பராமரித்து வருகின்றன, அகழிகளை வலுப்படுத்துகின்றன, கண்ணிவெடிகளை அமைக்கின்றன மற்றும் ட்ரோன் போரை திறம்பட பயன்படுத்துகின்றன.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிக நீண்ட கால போர் யுத்தியை பயன்படுத்தி வருவதகாவும், அமெரிக்காவின் ஆதரவு ஒருகட்டத்தில் நிறுத்தப்படும் வரையில் பொறுமையுடன் காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |