குடியிருப்பு பகுதியில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா.. வீதியில் செத்துக்கிடக்கும் மக்கள்! கலங்க வைக்கும் காட்சி
உக்ரைன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும், தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையலில், உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா நடத்தி தாக்குதலில் சிக்கி மக்கள் வீதியில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
குடியிருப்பு பகுதிகள் மீது சரமாரியாக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
#Kharkov under continuous shelling of enemy multiple launch rocket systems pic.twitter.com/FNbuPpFYlN
— NEXTA (@nexta_tv) February 28, 2022
ராக்கெட் ஒன்று சாலையில் சொருகி நிற்கும் காட்சியும், இந்ந தாக்குதலில் முதியவர் ஒருவர் காலை இழந்து இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருக்கும் கோர காட்சிகளும் வெளியாகியுள்ளது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
Likely the aftermath of MLRS fire in Kharkiv today. https://t.co/ZJwNZZXb89 pic.twitter.com/kNkLHRqKFO
— Rob Lee (@RALee85) February 28, 2022