ட்ரம்பின் வார்த்தையை மீறி ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா! குழந்தை உட்பட மூவர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ட்ரம்ப் தீவிரம்
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இதனை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனாலும், சில நாட்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), "தாக்குதலை நிறுத்துங்கள் புடின்" என கூறினார்.
மூவர் பலி
இந்த நிலையில், உக்ரைனின் தலைநகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நேற்று ரஷ்யா சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒரு குழந்தையும், பெண்ணொருவரும் அதில் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கண்டனத்தையும் மீறி ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |