உக்ரைன் மீது 900க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் மீது படையெடுக்க தொடங்கி கடந்த 3 வாரங்களில் அந்நாட்டின் மீது கிட்டதட்ட 900-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, வார இறுதியில் சிறிது முன்னேற்றம் அடைந்த பிறகு ரரஷ்ய முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்களின் பெரிய கான்வாய் கீவின் மையத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ளது.
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 900க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளன.
ஆனால் உக்ரைனின் வான்வெளி இன்னும் சவால் வாய்ந்ததாக இருக்கிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.