ரஷ்யாவின் புதிய 1-டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம்!
ரஷ்யா புதிதாக தயாரித்துள்ள ஒற்றை டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத் தேவையில்லை. ஒரே டோஸில் இது கோவிட் நோய்க்கு எதிராக 79.4 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sputnik Light எனும் இந்த மருந்து ரஷ்ய மக்களுக்கு செலுத்தப்பட்டதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை நிரூபணம் செய்துள்ளன. ஒரு டோஸ் போடப்பட்டு அடுத்த 28 நாட்களில் நல்ல அப்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சீரிய அளவில் இருப்பதாக, ஆய்வுகளை மேற்கொண்ட ரஷ்யாவின் நுண்கிருமிகள் மற்றும் தொற்று ஆய்வுக்கூடத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்ட் (Alexander Gintsburg) தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, இந்த மருந்தைக் கொண்டு ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கானா உள்ளிட்ட பல நாடுகளில் 7,000 பேர் சம்பந்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, அதன் இடைக்கால முடிவுகள் இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, ஸ்புட்னிக் லைட் உலகளவில் 10 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக செலவாகும் என்றும் இதனை எளிதாக சேமிக்கவும், ஏற்றுமதி செய்யவும் முடியும்.