ஜேர்மனிக்கு செல்லும் எண்ணையை துண்டிக்க ரஷ்யா முடிவு
கஜகஸ்தானின் எண்ணெய் ஜேர்மனிக்கு செல்வதை ரஷ்யா நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, மே 1 முதல் கஜகஸ்தானின் எண்ணெய் ஜேர்மனிக்கு செல்லும் Druzhba குழாய் வழியை நிறுத்த உள்ளதாக தொழில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மற்றும் ஜேர்மனி இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025-இல் கஜகஸ்தான், ஜேர்மனிக்கு தினசரி சுமார் 43,000 பீப்பாய் எண்ணெய் Druzhba குழாய் வழியாக அனுப்பியது.

2026 முதல் காலாண்டில் 7.3 லட்சம் டன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் நிறுத்தப்பட்டால், ஜேர்மனியின் Schwedt சுத்திகரிப்பு ஆலைக்கு 17 சதவீதம் அளவிலான எண்ணெய் விநியோகம் தடைப்படும்.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெர்லின் மற்றும் பிராண்டன்பர்க் பகுதிகளில் உள்ள 90 சதவீத கார்கள் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது.
இந்த தகவல் குறித்து, கஜகஸ்தான் மற்றும் ஜேர்மனி தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்புகளும் இல்லை.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் குழாய் வழி பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போலந்து குழாய் நிறுவனமான PERN, ஜேர்மனியின் Schwedt என்னை சுத்திகரிப்பு ஆலைக்கு Gdansk துறைமுகம் வழியாக எண்ணெய் அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த முடிவானது, மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Russia #Kazakhstan #Germany #OilSupply #DruzhbaPipeline #EnergyCrisis #UkraineWar