இந்தியாவை கைவிட்ட அமெரிக்கா! ஆதரவு கொடுக்கும் ரஷ்யா..உருவாகும் ஏவுகணை
டொனால்ட் ட்ரம்ப் இந்திய அரசியலில் அத்துமீறி வருவதாக கூறப்படும் நிலையில், ரஷ்யா தனது ஆதரவினை தெரிவித்து வருகிறது.
ட்ரம்பின் நடவடிக்கைகள்
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கிடம் கூறினார்.
இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கின்ற நாடுகளில் ஒன்றாக இருப்பதால், உங்களது பொருட்களை அங்கே விற்பது கடினம். எனவே, நீங்கள் இந்தியாவில் கட்டிடங்களை கட்டுவதை விரும்பவில்லை என ட்ரம்ப் அவரிடம் கூறியுள்ளார்.
இதுபோன்ற ட்ரம்பின் சமீபத்திய பேச்சுக்கள், நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதனால், மேற்குலகில் இந்தியாவின் உற்ற நண்பனாக பார்க்கப்படும் அமெரிக்கா கைவிட்டு விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணை
அதே சமயம், ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மொடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தொடங்கியுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை 800 கிலோ மீற்றர் ஆக விரிவுபடுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இதன் மூலம் விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன.
இவை எடை குறைவான ஏவுகணைகள். விமானத்தில் வைத்து தாக்கும் வகையிலான ஏவுகணைகள் ஆகும்.
MiG-29, Mirage 2000 போன்ற விமானங்களில் வைத்து ஏவக்கூடிய வகையில் விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகள் கொண்டு வரப்பட உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அமெரிக்காவை விட தற்போது ரஷ்யாதான் இந்தியாவின் உற்ற நட்பு நாடாக உள்ளது என்று கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |