கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியும் ரஷ்யா... மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம்
சோவியத் யூனியன் காலகட்டத்தின்போது செர்னோபில் என்னும் இடத்திலுள்ள அணு உலை ஒன்று வெடித்து உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டது.
ஆனாலும், அது குறித்து நன்றாக அறிந்த ரஷ்யாவே மீண்டும் அதேபோல் ஒரு பேரழிவை உண்டாக்கக்கூடிய ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது.
ஆம், உக்ரைனிலுள்ள Zaporizhia என்ற நகரைக் கைப்பற்றியது ரஷ்யா. அந்த நகரில்தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் உள்ளது. தற்போது அந்த அணுமின் நிலையத்திலிருந்தவண்ணமே, உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசியும், குண்டு மழை பொழிந்தும் வருகிறார்கள் ரஷ்யப் படையினர்.
அதாவது அந்த அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானது, அதின் மீது தவறுதலாக ஏவுகணைகள் அல்லது குண்டுகள் ஏதாவது விழுந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அழிவை உருவாக்கும் என்பது உக்ரைனுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் இதற்கு முன் பேரழிவை ஏற்படுத்திய செர்னோபின் நகரம் உக்ரைனில்தானே உள்ளது!
Credit: Reuters
இந்த விடயம் ரஷ்யாவுக்கும் தெரியும். ஆகவேதான், ரஷ்யப் படையினர் Zaporizhiaவிலுள்ள அணுமுன் நிலையத்திற்குள்ளிருந்து குண்டு வீசிவருகிறார்கள். பதிலுக்கு உக்ரைன் வீரர்கள் அணுமின் நிலையத்தை நோக்கி குண்டு வீசமாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆக, இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அந்த அணுமின் நிலையத்திலிருந்துகொண்டு ரஷ்யப் படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஆனால், அவர்கள் ஏவும் ஒரு ஏவுகணை அந்த அணுமின் நிலையத்திலேயே தவறுதலாக விழுந்துவிட்டால்கூட, அதற்குப் பின் ஏற்படும் பயங்கரங்களை உக்ரைன் மட்டுமல்ல, ரஷ்யாவும், அக்கம்பக்கத்து நாடுகளும் கூட அனுபவிக்கவேண்டிய நிலை வரலாம்.
கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறிகிறோம் என்னும் இந்த உண்மையை புடினுக்கு யார் உணர்த்த முடியும்?
Credit: AFP