ரஷ்யாவுடன் கைகுலுக்கிய ஜப்பான்! உக்ரைன் போர் நேரத்தில் இப்படியா செய்வது? முக்கிய தகவல்
உக்ரைனுடனான போர் பதற்றம் தொடரும் நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்துள்ளது.
2,050 டன் சால்மன், ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக ஜப்பான் ரஷ்யாவிற்கு 200 மில்லியன் யென்னில் இருந்து 300 மில்லியன் யென் வரை செலுத்தும்.
உக்ரைன் மீதான ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் பல அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில் தற்போது அந்த நாட்டுடன் மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.