உக்ரைனை சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய விமானப்படை
நேற்று இரவு கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது.
ஷெல் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கையான கிட்டத்தட்ட 2வது ஆண்டில் காலெடுத்து வைக்க உள்ளது.
இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதோடு, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை சற்று மந்த நிலைக்கு சென்று இருப்பதோடு, அவ்வப்போது ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்தி வந்தது.
ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில் கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் ஷெல் தாக்குதலை நேற்று இரவு ரஷ்யா அரங்கேற்றியுள்ளது.
75 ட்ரோன்கள் 71 ட்ரோன்களை விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது, இதில் 40 ட்ரோன்கள் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
This night, Russia launched its most massive shelling of Ukraine in months. Air defense forces shot down 71 drones out of 75, more than 40 of them over Kyiv.
— NEXTA (@nexta_tv) November 25, 2023
In Kyiv, 77 residential buildings and 120 institutions were left without light. The debris of drones fell in many areas… pic.twitter.com/BYoKS4kaHo
ரஷ்யா நடத்திய இந்த திடீர் பயங்கர ட்ரோன் தாக்குதலில், தலைநகர் கீவ் பகுதியில் உள்ள 77 குடியிருப்பு கட்டிடங்கள் 120 நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி குடிமக்களுக்கு விசா தேவையில்லை: உலகின் 2வது பெரிய பொருளாதார நாடு அறிவிப்பு
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்கள் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் விழுந்து இருப்பதாகவும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீ பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |