சீறிப்பாய்ந்த 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள்: உக்ரைனை இரவோடு இரவாக சுற்றி வளைத்த ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இது மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் தகவல்
உக்ரைன் அதிகாரிகள் வழங்கிய தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரையிலான காலகட்டத்தில் 479 ட்ரோன்கள் மற்றும் 20 ஏவுகணைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்டன.
ரஷ்யா முக்கியமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை தாக்கியதாக உக்ரைன் விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
இடை மறிக்கப்பட்ட டிரோன்கள்
உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 277 ட்ரோன்களையும் 19 ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இருப்பினும், 10 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மட்டுமே தங்களது இலக்குகளைத் தாக்கியதாகவும், இதில் ஒருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய தாக்குதல்கள், ரஷ்யப் படைகளால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரைன் பகுதிகளில் இருந்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |