கிழக்கு உக்ரைனிலும் ரஷ்யாவுக்கு தோல்வி?: ஒப்புக்கொண்ட புடின் ஆதரவாளர்
உக்ரைனை எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்ற கனவுடன் வந்த ரஷ்யப் படைகள், தலைநகர் Kyivஐக் கைப்பற்ற முடியாத அவமானத்தில் கிழக்கு உக்ரைனை நோக்கித் திரும்பின.
வெற்றிவிழாக் கொண்டாட்டங்களுக்கு முன் கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பகுதியையாவது பிடித்துவிடவேண்டும் என மும்முரத்துடன் தாக்குதலில் ஈடுபட்டன ரஷ்யப்படைகள். ஆனால், அதுவும் நடக்காததால் தனது வெற்றிவிழா உரையில் பொய்களாக அவிழ்த்துவிடவேண்டிய நிலைக்கு ஆளானார் புடின்.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனிலும் ரஷ்யப்படைகள் தோல்வியை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று சமூக ஊடகம் ஒன்றில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்த புடின் ஆதரவாளரான போர் ஊடகவியலாளர் Aleksandr Sladkov என்பவர், கிழக்கு உக்ரைனில் முன்னேற ரஷ்யப்படைகள் தடுமாறி வருவதை ஒப்புக்கொண்டுள்ளார்.
புடினுடைய ‘சிறப்பு ஆபரேஷன்’ வெட்கத்துக்குரிய வகையில் முடிவெடுக்க இயலாமல் திணறிவருவதாகவும், ரஷ்யப்படைகளால் உக்ரைன் படைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யப்படைகளால் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடையமுடியவில்லை என்றும், அவர்கள் உக்ரைன் படைகளிடமிருந்து பலத்த எதிர்ப்பை சந்தித்து வருவதாகவும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சில ரஷ்ய அதிகாரிகள் இராணுவ உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்துவருவதாகவும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.