உக்ரைனில் மக்கள் குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: பதிலடி நிச்சயம் என ஜெலென்ஸ்கி உறுதி
மேற்கு உக்ரைனிய நகரான லிவிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள லிவிவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லிவிவ் நகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய தாக்குதலில் மேலும் 32 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lviv. Consequences of the night attack by Russian terrorists. Unfortunately, there are wounded and dead. My condolences to the relatives!
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 6, 2023
There will definitely be a response to the enemy. A strong one. pic.twitter.com/9yl1MT6Eu4
இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய இந்த பயங்கர தாக்குதலுக்கு உக்ரைன் சரியான பதிலடி நிச்சயமாக வழங்கும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ராணுவம் எத்தகைய விளக்கங்களும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
ஏவுகணை தாக்குதலால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து குறைந்தது 7 பேராவது மீட்கப்பட்டு இருக்கலாம் என க்ளைமென்கோ தனது டெலிகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
The overnight attack on Lviv was the most devastating one on the city since the beginning of the full-scale war.
— Defense of Ukraine (@DefenceU) July 6, 2023
The youngest victim killed by the missile strikes was 21, the oldest 95.
? @HromadskeUA @radiosvoboda pic.twitter.com/yXtoVnxo8S
அத்துடன் மேலும் பலர் இடிபாடுகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிகள், பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்து இருப்பதாக மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார்.
EPA
இதற்கிடையில் கருங்கடலில் இருந்து ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் டெலிகிராமில் இது தொடர்பாக உக்ரைனிய விமானப்படை எழுதியுள்ள தகவலில், ரஷ்யா செலுத்திய 10 கலிபர் கப்பல் ஏவுகணைகளில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் ஒரு ஏவுகணை மட்டும் திசை மாறி லிவிவ் நகரை தாக்கியது என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |