நேட்டோ நாட்டுக்குள் விழுந்த ரஷ்ய ட்ரோன்: பதற்றத்தை உருவாக்கியுள்ள சம்பவம்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது, ஒரு ட்ரோன், நேட்டோ உறுப்பு நாடான ரொமேனியாவில் விழுந்து வெடித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நேட்டோ நாட்டுக்குள் நுழைந்த ட்ரோன்
இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் எல்லையிலுள்ள ரொமேனியா நாட்டிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மீது ஒரு ட்ரோன் விழுந்து வெடித்துள்ளது.
Early this morning, an apartment building in Romania was struck by a drone as Russia attacked Ukrainian infrastructure near the border. @SecGenNATO is in touch with Romanian authorities. We condemn Russia’s recklessness, and NATO will continue to strengthen our defences against…
— NATO Spokesperson (@NATOpress) May 29, 2026
அந்தக் கட்டிடம் தீப்பற்றிய நிலையில், ஒரு தாயும் மகளும் காயமடைந்துள்ளார்கள். அந்தக் கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த தாக்குதலை நேட்டோ அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக கண்டித்துள்ளன.
X
விடயம் என்னவென்றால், இதுவரை 47 முறை ரஷ்ய ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் ரொமேனியாவுக்குள் வந்து விழுந்துள்ளனவாம்.
என்றாலும் ஒரு ட்ரோன், ரொமேனியாவிலுள்ள மக்கள் குடியிருப்பில் விழுந்து வெடித்தது இதுவே முதல் முறையாகும்.
AFP via Getty Images
இதற்கிடையில், தாக்குதல் குறித்து நேட்டோ செக்ரட்டரி ஜெனரலிடமும், கூட்டாளர் நாடுகளுக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரொமேனிய வெளியுறவு அமைச்சர், ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளை தங்களுக்கு விரைந்து அளிக்குமாறு நேட்டோ அமைப்பிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |