ரஷ்யா விமான விபத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழப்பு? - விபத்திற்கான காரணம் என்ன?
49 பேருடன் சென்ற ரஷ்யா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தை சந்தித்துள்ளது.
ரஷ்யா விமானம் விபத்து
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம் பயணிகள் ஊழியர்கள் உட்பட சுமார் 50 பேருடன் சீன எல்லையோர டிண்டா நகரை நோக்கி பறக்க தொடங்கியது.
டிண்டா நகரை நெருங்கும் போது, ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி, விமானத்துடனான தொடர்பை ரஷ்ய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இழந்ததாக கூறப்படுகிறது.
5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
மயமான விமானம் விபத்துக்குள்ளானதா என்ற சந்தேகத்தின் பேரில், மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியில், திண்டாவில் இருந்து 15கிமீ தொலைவில் விமானம் கீழே விழுந்து விபத்தை சந்தித்துள்ளது.
An-24 crash site in Russia's Far East seen from helicopter — social media footage
— RT (@RT_com) July 24, 2025
49 on board, including 5 children and 6 crew — no survivors reported
Malfunction or human error considered as possible causes https://t.co/pLMgFY7kBG pic.twitter.com/rU5VWLOnXH
விமானம் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், மீட்பு படையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையிறங்கும் இடத்தின் அருகே, வானிலை மோசமாக இருந்துள்ளது. அப்போது, விமானத்தை தரையிறக்க முயற்சித்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |