அச்சுறுத்தும் monkeypox... ரஷ்யாவின் உயிரியல் ஆயுதமா? எச்சரிக்கும் அறிக்கை
பிரித்தானியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அபாயகரமாக பரவும் monkeypox என்ற குரங்கம்மை நோய் ரஷ்யாவின் இராணுவ விஞ்ஞானிகளால் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
குறித்த பகீர் தகவலை முன்னாள் ரஷ்ய இராணுவ கர்னல் ஒருவரே நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். 1991ல் சோவித் ரஷ்யா தகர்ந்து போகும் வரையில் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு முதன்மை அதிகாரியாக செயல்பட்டவர் Ken Alibek.
மொத்தம் 40 மையங்களில் 32,000 ஊழியர்களுக்கு இவர் தலமைதாங்கியுள்ளார். பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். 1998ல் இவர் அளித்த நேர்காணலில், சோவியத் ரஷ்யாவின் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமானது.
monkeypox உட்பட பல்வேறு நோய் தொற்றுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டதாகவும், மனிதர்கள் மீது எவ்வாறு அதை ஆயுதமாக பயன்படுத்தலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் monkeypox மாதிரிகளை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் monkeypox தொற்றானது ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக தாம் கருதவில்லை என தெரிவித்துள்ளார் முன்னாள் ஐக்கிய நாடுகள் மன்ற அதிகாரி ஒருவர். இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் மட்டும் இதுவரை 20 பேர்களுக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 11 நாடுகளில் தற்போது monkeypox உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குரங்கம்மை தொற்றின் உலகளாவிய பரவலால் தாங்கள் குழப்பமடைந்துள்ளதாக ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியம்மை தடுப்பூசிகளை இங்கிலாந்து தற்போது சேமித்து வைத்துள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மேலும் 20,000 டோஸ் தடுப்பூசிகள் வாங்கவும் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.