உக்ரைனை மொத்தமாக இருளில் மூழ்கடிக்க திட்டமிடும் ரஷ்யா: அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவின் கடும்போக்கு நடவடிக்கையால் அணுமின் நிலையமானது பெரும் விபத்தை சந்திக்கக் கூடும்
அணுமின் நிலையத்தில் இருந்து உக்ரைனுக்கான மின் இணைப்பை மொத்தமாக துண்டிக்கும் நடவடிக்கை
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து உக்ரைனுக்கான மின் இணைப்பை மொத்தமாக துண்டிக்க ரஷ்யா நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கையால் குறித்த அணுமின் நிலையமானது பெரும் விபத்தை சந்திக்கக் கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் உக்ரைனின் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர்.
@reuters
இது தொடர்பில் Petro Kotin தெரிவிக்கையில், ரஷ்ய பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், இது ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து உக்ரைனுக்கான மின் இணைப்பை மொத்தமாக துண்டிக்கும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்ய பகுதிக்கு இணைப்பு ஒன்றை புதிதாக முன்னெடுக்கவும் செயல்படுவதாக Petro Kotin தெரிவித்துள்ளார். ரஷ்ய பொறியாளர்கள் தங்கள் திட்டப்படி செயல்படுவார்கள் எனில், இது ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் அமைப்புகளின் பேரழிவுகரமான தோல்விக்கு வழிவகுக்கும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஜாபோரிஜியா அணுமின் நிலையமானது ரஷ்ய துருப்புகலின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் உக்ரைன் ஊழியர்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதுடன், ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு உரிய தகவலை அளிப்பதை தடுத்தும் வருகின்றனர்.
@AP
மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகாரிகள் குறித்த அணுமின் நிலையத்தை சோதனை மேற்கொள்வதாக இருந்தால், திடீர் தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து, பழியை உக்ரைன் மீது சுமத்தவும் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சோவியத் காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதுடன், ஆயுதங்களை சேமிக்கும் கிடங்காகவும் ரஷ்யா பயன்படுத்தி வருவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் Petro Kotin தெரிவித்துள்ள தகவலின்படி, உக்ரைன் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.