சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க முடிவெடுத்த பிரபல நாடு
.வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பூமிக்கு மேல் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை, கடந்த 1998-ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டாக அமைத்தன.
இதுவரை இந்த இரண்டு நாடுகளுடன் இணைந்து கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆய்வாளர்கள் இந்த விண்வெளி நிலையத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
வரும் 2024-ஆம் ஆண்டுடன் ரஷ்யாவின் ஒப்பந்தம் முடிவடையவுள்ளது.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளதால், அது தானாகவே செயலிழந்து 2030-க்கும் 2050-க்கும் இடையில் பூமியில் எங்காவது ஒரு இடத்தில் விழும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக, அமெரிக்காவுடனான அரசியல் மற்றும் வர்த்தக பனிப்போரை கருத்தில் கொண்டு, 2025-க்குள் சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.