பால்டிக் நாடுகள் அல்லது போலந்தை வம்புக்கிழுக்க தயாராகி வரும் ரஷ்யா
மேற்கத்திய இராணுவ நட்பு நாடுகளின் ஒற்றுமையைச் சோதிக்கும் முயற்சியாக, பால்டிக் நாடுகள் அல்லது போலந்தை வம்புக்கு இழுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆபத்து ஏற்படக்கூடும்
நேட்டோவின் கிழக்கு எல்லையில் உள்ள இரண்டு நாடுகள் இந்த விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்கு அருகிலுள்ள இலக்குகள் மீது உக்ரைன் நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்தி வருவதால், புடின் நிர்வாகம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது; இதனால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மேற்கத்திய வட்டாரங்கள் அஞ்சுகின்றன.
திங்களன்று லாட்வியாவின் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பால்டிக் நாடுகள் அல்லது போலந்துக்கு எதிராக ரஷ்யா ராணுவ ரீதியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இது ஒரு முழு அளவிலான தாக்குதலாக இருக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்னொரு நேட்டோ உறுப்பு நாட்டின் மூத்த அரசியல் வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலில், பால்டிக் நாடுகளுக்கு எதிராக விளாடிமிர் புடின் ஏதோ ஒன்றைத் திட்டமிட்டு வருகிறார் என கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நேட்டோ அமைப்பின் மிகச்சிறிய உறுப்பு நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகியவற்றிற்கான அமெரிக்காவின் ஆதரவைச் சோதித்துப் பார்க்க புடின் முடிவு செய்திருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு வார கால எச்சரிக்கை
மட்டுமின்றி, இரண்டாவது போர்முனையைத் திறக்கும் திறன் ரஷ்யாவிற்கு இல்லை என்று கூறியுள்ள லாட்விய உளவுத்துறை, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துங்கள் அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் வகையில் சிக்கல் உள்ளூரில் ஏற்படும் என ட்ரோன்கள், ஏவுகணைகளால் எச்சரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தியதை அடுத்து, பெலாரஸில் உள்ள ட்ரோன் ரிலே நிலையங்கள் செயல்படுவதை நிறுத்தியதன் மூலம், ரஷ்யாவின் பலவீனம் இந்த வாரம் அம்பலமாகியுள்ளது.

அந்த உபகரணங்கள் தனது நாட்டின் மீதான ரஷ்யத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன என்று கூறி, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை பெலாரஸுக்கு ஒரு வார கால எச்சரிக்கை விடுத்திருந்தார்.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், பிரெஸ்ட் மற்றும் கோமல் பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த ட்ரோன் ரிலே நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |