மாஸ்கோ தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றும் உக்ரைன் மீது பழி போடும் விளாடிமிர் புடின்
கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா எதிர்கொள்ளாத மிகப்பெரிய தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்பு மீது எந்த கருத்தையும் பதிவு செய்ய ரஷ்யா மறுத்துள்ளது.
உக்ரைனுக்கு தாக்குதலில் தொடர்பு
மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் 11 பேர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. அவர்களை கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தி, அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதிந்துள்ளது.
தொடர்புடைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 137 என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்தே ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதுடன், ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனுக்கு இந்த தாக்குதலில் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ் குழு பொறுப்பேற்றுள்ளதற்கு மூத்த ரஷ்ய அதிகாரிகளும் பதிலளிக்க மறுத்துள்ளனர்.
விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை தங்களுக்கு உறுதியான பின்னணி வெளிப்படவில்லை என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடந்த பகுதிக்கு விளாடிமிர் புடின் பார்வையிட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு தக்க பதிலடி
மாறாக பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் குழுவினருடன் சந்திப்பு ஒன்றை முன்னெடுப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் கைதான அனைவரும் தஜிகிஸ்தான் நாட்டவர்கள் என்றே தகவல் கசிந்துள்ளது.
இருவர் தங்கள் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கைதானவர்களில் ஒருவர் ரஷ்ய நாட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. மாஸ்கோ தாக்குதலில் மூன்று சிறார்கள் உட்பட 137 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் போது அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் எண்ணிக்கை 5,000 என்றே கூறப்படுகிறது. மாஸ்கோ தாக்குதலுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்றே விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா மீதும் விளாடிமிர் புடின் மீதும் மீண்டும் தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று ஐ.எஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |