ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தடை!
ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மாகாண செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 900 அமெரிக்கர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடைவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் 87வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் பல அடுக்கு பொருளாதார தடைகளையும் ரஷ்யாவின் மீது விதித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்ய அரசாங்கமும் பல்வேறு தடை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
Getty Images
அந்தவகையில், ரஷ்யாவிற்குள் நுழைய 900 அமெரிக்கர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்து இருந்தது, ஆனால் யார் யார் இந்த தடையில் உள்ளனர் என்ற முழு அறிக்கையையும் ரஷ்யா இதுவரை வெளியிடாமல் இருந்தது.
இந்தநிலையில், ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மாகாண செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட 900 அமெரிக்கர்களையும் உள்ளடக்கிய முழுத் தடை விவரப் பட்டியலையும் ரஷ்ய அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் கலாச்சார அரண்மனையை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: பரபரப்பு வீடியோ காட்சி!
இதன் முலம் ரஷ்யா மோதலை விரும்பவில்லை என்றும், நேர்மையான பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.