பிரித்தானியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய உளவுப்பிரிவு: தொடர்புகொண்ட நபரை கைது செய்த ரஷ்யா
நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது.
55 வயதான நபர் கைது
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்று 55 வயதான நபர் ஒருவரை, கபரோவ்ஸ்கில் கைது செய்ததாக தெரிவித்தது.

அந்த நபர் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய the Five Eyes உளவுத் தகவல் பகிர்வு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் நியூஸிலாந்து உளவுத்துறை சேவைகளை தொடர்பு கொண்டதாக FSB அறிக்கையில் கூறியுள்ளது.
உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக
மேலும், குறித்த நபர் ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரித்து பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக, அந்த நபரை நியூஸிலாந்து சேர்த்ததாகவும் FSB கூறியது.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |