477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள்..! உக்ரைன் மீது ரஷ்யா பிரம்மாண்ட வான்வழித் தாக்குதல்
ரஷ்யா இன்று உக்ரைன் மீது பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 477 டிரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் குறைந்தது ஆறு மாகாணங்களில் இத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாகப் பல உள்கட்டமைப்புகளும், தொழில்துறை தளங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
தாக்குதலின் சேதங்கள்
லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
செர்காசியில், பல வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்துள்ளன. இதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் நகரில் ஒரு பெண் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய விமானியின் வீரமரணம்
இந்தத் தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனிய F-16 போர் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரைனிய விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, அவர் ஏழு வான் இலக்குகளை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளார். ஆனால், கடைசி இலக்கைச் சுடும்போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் எதிர்ப்பு மற்றும் ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்
இந்த வான்வழித் தாக்குதலின் போது, உக்ரைனிய படைகள் 211 டிரோன்களையும், 38 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |