162 ட்ரோன்கள், 57 விமானங்களை சுட்டுவீழ்த்திய ரஷ்யா!
உக்ரேனின் 162 ட்ரோன்கள் மற்றும் 57 விமானங்களை இரவில் வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்புப் படையினர்
ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் வோரோனேஜ் பகுதிகளில் இரவு முழுவதும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பிடித்து எறிந்தன. மேலும் வீடுகள் பலவும் தீப்பிடித்து சேதமடைந்தன.
ஆனால், இரவு முழுவதும் வான் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், உக்ரைனின் 162 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
அத்துடன் 57 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் குர்ஸ்க் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார்.
விழுந்த ட்ரோன் குப்பைகள்
மேலும், 16 உக்ரேனிய ட்ரோன்கள் வோரோனேஜ் பகுதியில் அழிக்கப்பட்டதாகவும், அவை M-4 எக்ஸ்பிரஸ்வேயில் விழுந்ததாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் கூறினார்.
அத்துடன் அவர் மாஸ்கோ, வோரோனேஜ், ரோஸ்டோவ்-ஆன்-டான் மற்றும் கிராஸ்னோடர் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஒரு சிறிய பகுதி மூடப்பட்டதாகவும், விழுந்த ட்ரோன் குப்பைகள் பல வீடுகளின் முகப்பையும் சேதப்படுத்தியதாகவும் கூறினார்.
இரண்டு பிராந்தியங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள், இஸ்தான்புல்லில் இரண்டாவது சுற்று புதுப்பிக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |