தடுப்பூசி போடதவர்கள் வேலைக்கு செல்ல முடியாது! ரஷ்யாவின் முக்கிய அறிவிப்பு
தடுப்பூசி போடதவர்களுக்கு குறைந்த வேலை வாய்ப்பே கிடைக்கும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடாத அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு ரஷ்யாவில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் வேலை செய்ய இயலாது, தவிர்க்க முடியாமல் பாகுபாடு காட்டப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த பாகுாபடு தவிர்க்க முடியாத ஒன்று. தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்ய முடியாது, அது சாத்தியமில்லை.
இது அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தாக அமையும் என்று ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஷ்யாவில் பல பிராந்தியங்களில் தொற்றுகள் அதிகரிப்பதை தடுக்க அதிகாரிகள், மக்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, சில ரஷ்ய பிராந்தியங்களில் கொரோனா நிலைமை மோசமடைந்து வருவதாக ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். த
தடுப்பூசி போட மக்கள் தயங்குவதால் தான் தொற்றுகள் அதிகரித்துள்ளதாக ரஷ்ய அரசு குற்றம் சாட்டியுள்ளது.