கிம் ஜோங் உன்னிற்கு விடுதலைக்காக நன்றி தெரிவித்த ரஷ்யா
குர்ஸ்க் விடுதலைக்காக வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகள்
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் வடகொரியர்கள் பலரை ரஷ்யா ஈடுபடுத்தியது. ஆயிரக்கணக்கான துருப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை வடகொரியா அனுப்பியது.

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குர்ஸ்க்கிற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகள் அனுப்பப்பட்டனர். ஆனால், சுமார் 2000 வடகொரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சியோல் மதிப்பிடுகிறது.
இதற்கு பதிலாக, வடகொரியா ரஷ்யாவிடம் இருந்து நிதி உதவி, இராணுவத் தொழில்நுட்பம், உணவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றைப் பெற்று வருவதாகவும், இது வடகொரியாவின் தடைசெய்யப்பட்ட அணுசக்தித் திட்டங்கள் மீதான கடுமையான சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க உதவுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில், உக்ரேனியர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக குர்ஸ்க் நகருக்குத் துருப்புகளை அனுப்பி "குர்ஸ்க் நகரை விடுவித்ததற்காக" வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு, ரஷ்யாவின் ஸ்டேட் டூமா சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக TASS செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தோளோடு தோள் நின்று போராடி
உக்ரைன் போரில் கொல்லப்பட்டவர்களை கௌரவிக்கும் நினைவு வளாகத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள, ரஷ்ய தூதுக்குழுவுடன் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் சனிக்கிழமை வடகொரியாவிற்கு வந்தடைந்தார்.

அப்போது அவர், "மதிப்பிற்குரிய தோழர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும், குர்ஸ்க் விடுதலையில் சகோதரத்துவ ஆதரவை வழங்கிய கொரிய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரிய வீரர்கள் நமது வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தோளோடு தோள் நின்று போராடி, உக்ரேனிய நாஸிக்களிடம் இருந்து ரஷ்ய மண்ணை விடுவித்தனர்" என்றும் கூறியதாக செய்தி நிறுவனம் மேற்கோள்கட்டியுள்ளது. அதே சமயம் இந்த சந்திப்பு குறித்து வடகொரியா இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |