எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்... அச்சத்தில் மற்றொரு நாடு: பரபரப்பாகும் போர்ச்சூழல்
ரஷ்யா, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன் நாடு போரை எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக வெளியாகியுள்ள செய்திகளால் பதற்றம் உருவாகியுள்ளது.
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், தங்களுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதி நேட்டோ அமைப்பில் சேரத் தயாரானது ஸ்வீடன். ஆனால், அதன் முடிவு ரஷ்யாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி புடின், நேட்டோ அமைப்பை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார். ஆகவே, நேட்டோவில் மேலும் மேலும் நாடுகள் சேர்ந்து அந்த அமைப்பை வலுப்படுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, ரஷ்ய எல்லையிலுள்ள ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைவது தனது நாட்டுக்கு ஆபத்து என அவர் கருதுகிறார்.
ஆகவே, ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றுவருவதால், ஸ்வீடன் மீது கோபத்திலிருக்கிறார் புடின்.
திடீரென பரபரப்பாகும் சூழல்
ஸ்வீடன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்த செய்திகள் முன்பே வெளியாகின. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென ஸ்வீடனில் பரபரப்பு உருவாகியுள்ளது.
ரஷ்யா, உக்ரைனைத் தொடர்ந்து, தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளதால், மக்கள் போருக்குத் தயாராக இருக்குமாறு மூத்த ஸ்வீடன் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில், ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாடு நிதர்சனத்தில், போருக்குத் தயாராகவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஸ்வீடன் பாதுகாப்புத்துறை அமைச்சரும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஸ்வீடனுக்கும் வரலாம் என்று கூறியுள்ளதால் ஸ்வீடனில் பெரும் பரபரப்பு உருவாகிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |