30 நிமிடத்திற்கு ஒரு முறை ரஷ்யா குண்டு வீச்சு! நரகத்தில் இருப்பது போல தத்தளிக்கும் மக்கள்
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மேயர் வேதனை தெரிவித்துள்ளார்.
மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள்.
சுமி நகரிலிருந்து 12,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மரியுபோலில் இருந்து யாரும் வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கப்படவில்லை. 4 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மரியுபோல் துறைமுக நகரத்தில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியுள்ளது போல் தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.
மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ருஷென்கோ கூறுகையில் ரஷ்யா எங்கள் மக்களை அழிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டது. அதனாலேயே மீட்புப் பணிகளை முடக்குகிறது என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
இதனிடையில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.