மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: சுட்டுத் தள்ளிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் புதிய ட்ரோன் தாக்குதலை இன்று முன்னெடுத்துள்ளது.
ரஷ்யா நோக்கி திரும்பும் போர்
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் ஓராண்டுகள் மேல் வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது எத்தகைய தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது, ஆனால் சமீபத்திய மாதங்களில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது தொடர் வான்வழி ட்ரோன் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் பயங்கர ட்ரோன் தாக்குதல் நடத்தியது, மேலும் இதனால் அங்குள்ள விமான நிலையம் சிறிது நேரத்திற்கு முடப்பட்டது.
❗️ Another drone attack on Moscow#Moscow residents are massively reporting the sounds of an explosion. Moscow Mayor Sobyanin said that a drone was shot down by air defense forces while attempting to fly over Moscow. The wreckage of the UAV fell in the area of Expocenter.
— NEXTA (@nexta_tv) August 18, 2023
Now… pic.twitter.com/HNlgPTsmGQ
இது தொடர்பாக பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் ரஷ்யாவின் நிலப்பரப்பை நோக்கி திரும்புகிறது, இது தவிர்க்க முடியாதது என தெரிவித்து இருந்தார்.
மாஸ்கோ மீது மீண்டும் தாக்குதல்
இந்நிலையில் இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள நகர எக்ஸ்போ மையத்தின் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து பேசிய மேயர் செர்ஜி சோபியானின், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனிய ட்ரோன்களை சுட்டுத் தள்ளியதில் அதன் செயலிழந்த பாகங்கள் நகரின் எக்ஸ்போ மையத்தின் மீது விழுந்து சேதம் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி 4.00 மணிக்கு அரங்கேறி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. அத்துடன் இந்த தாக்குதலால் மாஸ்கோவின் Vnukovo விமான நிலையம் மூடப்பட்டு பின் மீண்டும் திறக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |