சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தில் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் கண்டனம்
போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள உக்ரைனின் லிவிவ் நகரின் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் இன்று வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 18வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும் தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து தொடர் வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
russia has attacked the International Center for Peacekeeping&Security near Lviv.Foreign instructors work here.Information about the victims is being clarified.This is new terrorist attack on peace&security near the EU-NATO border.Action must be taken to stop this.Close the sky!
— Oleksii Reznikov (@oleksiireznikov) March 13, 2022
இந்த நிலையில் உக்ரைனின் மேற்கு பகுதி நகரான லிவிவ்வில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மையம் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலும் இதர லிவிவ் நகரப் பகுதிகளில் ரஷ்யா வான் படை இன்று நடத்திய தாக்குதலில் 9 நபர்கள் இறந்துள்ளதாகவும், 57 நபர்கள் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அந்த பகுதியின் மேயர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், வெளிநாடுகளை சேர்ந்த பயிற்றுனர்கள் அதிகமாக பணிபுரியும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தின் மீது ரஷ்ய இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய எல்லைக்கு மிக அருகில் உள்ள சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புமையம் வரை நீண்டுவிட்ட இந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து தடுப்பு நடவடிக்கை விரைவாக முன்னெடுக்க வேண்டும். உக்ரைன் வான்பரப்பை மூடவேண்டும் என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.