அரிசி இறக்குமதி... ஆசிய நாடொன்றிற்கு தடை விதிப்பு மிரட்டல் விடுத்த ரஷ்யா
ரஷ்யா முன்வைக்கும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படாவிட்டால், அரிசி இறக்குமதியை மீண்டும் தடை செய்யப்போவதாக பாகிஸ்தானை ரஷ்யா எச்சரித்துள்ளது.
FSVPS அமைப்பு எச்சரிக்கை
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் சர்வதேச மற்றும் ரஷ்ய தாவரவியல் விதிகள் மீறப்பட்டுள்ளதை கண்டறிந்த நிலையிலேயே ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
மேலும், இதுபோன்ற மீறல்களைத் தடுக்குமாறு பாகிஸ்தான் தூதரகத்துக்கு ரஷ்ய அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன் அனைத்து பாகிஸ்தானிய அரிசி ஏற்றுமதியாளர்களும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் விவசாயப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பைட்டோசானிட்டரி தரநிலைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ரஷ்யா தடை விதித்தது
சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதிக்கு ரஷ்யா தடை விதித்தது. இதேபோல், 2006 டிசம்பரில், உணவுப் பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்யாததால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை ரஷ்யா நிறுத்தியது.
கடந்த ஆண்டு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் பாகிஸ்தான் பயனடைந்தது. கடந்த ஆண்டு, பாசுமதி தவிர்த்து வெள்ளை மற்றும் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னணி அரிசி வியாபாரியின் கூற்றுப்படி, டிசம்பர் 2023ல் மட்டும் பாகிஸ்தான் சுமார் 700,000 டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளத குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |