ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவங்கள் இணைந்து போர் ஒத்திகை !ஏமனில் நிலக்கண்ணி வெடி விபத்து.. உலக செய்திகள்
ஏமன் நாட்டில் அல் காவ்கா மாவட்டத்தில் ஹொடெய்டா நகரில் ஹவுதி பயங்கரவாதிகள் நிலக்கண்ணி வெடியை புதைத்து வைத்து உள்ளனர். இதில், அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த வாகனத்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தில் கடத்தல்காரர்கள் சிலர் 2 பேரை சிறை பிடித்து வைத்து அவர்களை விடுவிக்க பணய தொகை கேட்டு மிரட்டலும் விடுத்தனர். அவர்களை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவங்கள் இணைந்து போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றன. இதில் சுமார் 2 லட்சம் ரஷ்ய படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ZAPAD-2021 என்ற பெயரில் ரஷ்யாவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்ககவும்.