உக்ரைன் போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் கதவு தீயிட்டு எரிப்பு! கைது செய்யப்பட்ட ரஷ்ய நபர்
ரஷ்யாவில் அருங்காட்சியகத்தின் கதவு தீ வைத்து எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அருங்காட்சியகம்
Saratov நகரில் கடந்த சூலை மாதம் SVO எனும் சிறப்பு இராணுவ நடவடிக்கை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
இது இராணுவ ஈடுபாட்டுடன் பள்ளி மாணவர்களுக்கான தேசபக்தி நிகழ்வுகளை காட்டுகிறது. அதன் கண்காட்சிகளில் உக்ரைனில் சண்டையிட்டு கொல்லப்பட்ட Saratov உள்ளூர்வாசிகளின் தனிப்பட்ட பொருட்கள் மற்றும் டான்பாசின் போர் கோப்பைகளும் அடங்கும்.
இந்த நிலையில் சிறப்பு இராணுவ நடவடிக்கை அருங்காட்சியக கதவுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
2ГИС карты
ரஷ்ய நபர் கைது
இதுதொடர்பில் ரஷ்ய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Saratov குடியிருப்பாளர் Maxim Kim என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் டஜன் கணக்கான இராணுவப் பதிவு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
மேலும், சில கைதிகள் தங்களை FSB அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு தீ வைப்பதில் ஏமாற்றப்பட்டதாகக் கூறுகின்றனர்.
iStock, BrianAJackson
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |