தாங்க முடியாத கொடூரங்கள்... ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் பெண் பொலிஸ் அதிகாரி குறித்து தாயார்
ரஷ்ய ராணுவத்தினரிடம் சிக்கி 2 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட உக்ரைன் பெண் பொலிஸ் அதிகாரியை உறவினர்களும் நண்பர்களும் வரவேற்றுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 24 வயதான Mariana Checheliuk என்ற பொலிஸ் அதிகாரியும் உக்ரைன் திரும்பியுள்ளார்.
அவருடன் 74 உக்ரைன் நாட்டவர்களும் விடுவிக்கப்பட்டனர். தேசிய பொலிஸ் சேவையில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டவர் Mariana Checheliuk. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய அவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவர் விடுவிக்கப்பட, உக்ரைன் மண்ணில் கால் பதித்த போது அவரை அறியாமலே கண் கலங்கியுள்ளார். அவரை உக்ரேனிய கொடியுடன் வரவேற்ற மக்கள் ஆரத்தழுவிக் கொண்டனர்.
வெளியே சொல்ல முடியாத
இந்த நிலையில் Mariana Checheliuk-ன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தாங்க முடியாத துயரத்தையும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் Mariana Checheliuk அனுபவித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருக்கும் போது உடல் எடை குறைந்து, தலை முடி உதிர்ந்து, மாதவிடாய் இன்மையாலும் அவர் அவதிப்பட்டுள்ளார் என தாயார் Nataliia தெரிவித்துள்ளார்.
கொடூரமான தாக்குதலுக்கு இலக்கானதுடன் வெளியே சொல்ல முடியாத துஸ்பிரயோகங்களுக்கும் தமது மகள் இரையானார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய குண்டுவீச்சுக்கு பயந்து சகோதரியுடன் ஒளிந்திருக்கும் போது ரஷ்ய ராணுவத்தால் இருவரும் கைது செய்யப்பட்ட, உக்ரைன் ராணுவத்தினரால் Mariana Checheliuk-ன் சகோதரியை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |