மாஸ்கோவில் காரில் ஏறிய ரஷ்ய தளபதி... வெடித்துச் சிதறிய கார்: உக்ரைன் கொலை முயற்சி என சந்தேகம்
உக்ரைன் போரில் முக்கிய பங்காற்றும் ரஷ்ய தளபதி ஒருவர் மாஸ்கோவில் தனது காரில் ஏறும்போது அவரது கார் வெடித்துச் சிதறியது.
இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்றும், அதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
உக்ரைன் போரில் முக்கிய பங்காற்றும் ரஷ்ய தளபதி
உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தொடர்பில் முக்கிய பங்காற்றுபவரும், ராணுவ சேட்டிலைட் தகவல் தொடர்பு தளபதியுமான Andrei Torgashov (50) என்பவர், தனது காரில் ஏறிய அடுத்த கணம் அவரது கார் வெடித்துச் சிதறியது.
அந்தக் காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது உக்ரைன் போருக்காக பழிக்குப் பழி வாங்குவதற்காக நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி என்றும் ரஷ்ய அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இந்த பயங்கர தாக்குதலில் Torgashov உயிர் பிழைத்துவிட்டார். என்றாலும், அவரது கால்கள் சிதைந்துவிட்டதால் மருத்துவர்கள் அவரது கால்களை அகற்றிவிட்டதாகவும், அவரது நிலைமை இன்னும் அபாய கட்டத்தில்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |