உக்ரைனிலுள்ள பள்ளியை தாக்கிய ரஷ்யாவின் ஆளில்லா விமானம்: பரிதாபமாக 4 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை இரவோடு இரவாக ரஷ்யாவின் ஆளில்லா விமானம் தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி மீது தாக்குதல்
உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் இரவோடு இரவாக ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@afp
கிய்வின் தெற்கு பகுதியில் ரஷ்யா ட்ரோன் மூலம் நடத்திய ராணுவ தாக்குதலில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததோடு அதிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவர் 40 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் ஆவார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
@afp
கீவ் நகருக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியின் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் அந்த கட்டிடத்திலிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் ஆளில்லா விமானங்கள்
ரஷ்ய படையின் தாக்குதலால் இடிந்து சேதமடைந்த கட்டிடத்தின் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு மாணவர் குடியிருப்புகளின் இரண்டு தளங்கள் மற்றும் படிப்பதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடம் சேதமாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
@afp
ஈரானில் தயாரிக்கப்பட்ட 21 ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனை ரஷ்யா தாக்கியதாகவும், அதில் 16 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
”20க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஏராளமான ஷெல் தாக்குதல்கள் இவை அனைத்தையும் ஒரே இரவில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
@afp
ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குகிறது, இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் சமைப்பதையோ அல்லது குடிநீரைப் பெறுவது கூட கஷ்டமாக உள்ளது என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.