டிக்கெட், கடவுச்சீட்டு ஏதுமின்றி விமானத்தில் பயணித்த ரஷய நாட்டவர்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
டிக்கெட், கடவுச்சீட்டு அல்லது விசா ஏதுமின்றி விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணமான ரஷ்யருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என கலிபோர்னியா நீதிமன்றம்
சட்டத்திற்கு புறம்பாக பயணம் மேற்கொண்ட 46 வயதான Sergey Ochigava என்பவர் குற்றவாளி என வெள்ளிக்கிழமை கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
@getty
நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில், ரஷ்யா மற்றும் இஸ்ரேலிய குடிமகனான Ochigava கடந்த நவம்பர் 4ம் திகதி ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் Copenhagen பகுதியில் இருந்து புறப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.
அவரிடம் அப்போது கடவுச்சீட்டு அல்லது விசா என எதுவும் இல்லை, மேலும் எந்த விமானங்களுக்கான பயணிகள் பட்டியலிலும் அதிகாரிகளால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிப்ரவரி 5 ஆம் திகதி தண்டனை
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நவம்பர் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் பெடரல் சிறைத் தண்டனையை எதிர்கொள்வார் என்றும் பிப்ரவரி 5 ஆம் திகதி அவருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@kabc
முன்னதாக அவரை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு, அவர் பையில் இருந்து ரஷ்ய மற்றும் இஸ்ரேலிய அடையாள அட்டைகள் மட்டுமே சிக்கியுள்ளது. ஆனால் அவருக்கான கடவுச்சீட்டு இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி முரணான தகவல்களையே அவர் கூறியும் வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |