வெளிநாட்டு விமானத்தை விரட்டி அனுப்பிய ரஷ்ய போர் விமானம்.. நடுவானில் நடந்த சம்பவம்...!
தங்கள் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற நோர்வே விமானத்தை ரஷ்ய போர் விமானம் விரட்டி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 11ம் திகதி அன்று Barents கடலில் மேற்பரப்பில் விமானம் ஒன்று ரஷ்ய எல்லையை நோக்கி வருவதை ரஷியாவின் வான்வெளி கட்டுப்பாட்டு அறை கண்டறிந்துள்ளது.
குறித்த விமானத்தை அடையாளம் காணவும், எல்லையை மீறி ரஷ்யாவிற்கு நுழைவதை தடுக்கவும், வடக்கு கடற்படையின் வான் பாதுகாப்பு படையில் இருந்து மிக் -31 போர் விமானத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.
எல்லையை நோக்கி வரும் விமானம் நோர்வே விமானப்படையின் ஆர் -3 சி ஓரியன் பேஸ் ரோந்து விமானம் என ரஷ்யாவின் மிக் -31 போர் விமானக் குழு அடையாளம் கண்டுள்ளது.
பின் அதை தடுத்து உடன் சென்று Barents கடலுக்கு அப்பால் விட்டதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோர்வே இராணுவ விமானம் எல்லையிலிருந்து விலகிய பிறகு, ரஷ்ய போர் விமானம் தனது சொந்த விமானநிலையத்திற்கு திரும்பியுள்ளது.
வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிகளின்படி ரஷ்ய விமானம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.