மற்றொரு நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்: பின்னணியை விளக்கும் செய்தி
பின்லாந்துக்குள் அத்து மீறி நுழைந்து அராஜகம் செய்துள்ளது ரஷ்யா!
ஆம், ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று, பின்லாந்தின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
விடயம் என்னெவென்றால், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, பின்லாந்து, ஸ்வீடன் முதலான சில நாடுகள் தங்கள் பாதுகாப்புக் கருதி நேட்டோ அமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த விடயங்கள் ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, நேட்டோ அமைப்பில் இணைந்தால் பின்விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்றும், பழிக்குப் பழி வாங்கும் வகையில் பால்டிக் கடற்பகுதிக்கு அணு ஆயுதங்களை அனுப்பப்போவதாகவும் புடின் எச்சரித்திருந்தார்.
அத்துடன், பின்லாந்து தானே தன் அழிவைத் தேடிக்கொள்வதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் எச்சரித்திருந்தார்.
ஏற்கனவே, ரஷ்யா ஏப்ரல் மாதம் 8அம் திகதி ஒரு முறை பின்லாந்தின் வான்வெளிக்குள் அத்து மீறி நுழைந்தது. இந்நிலையில், மீண்டும் ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன்று பின்லாந்து வான்வெளிக்குள் நுழைந்துள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.