G20 உச்சி மாநாட்டில் குழப்பம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்து கொள்ள மறுத்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
SKY NEWS
இந்நிலையில் இந்தோனேசிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம், பாலியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு ஆதாரங்கள் செர்ஜி லாவ்ரோவ் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மறுப்பு
இதற்கிடையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
SKY NEWS
அத்துடன் இது முழுக்க முழுக்க போலி செய்தி என்றும், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தனது டெலிகிராமில் தான் தற்போது லாவ்ரோவுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பாலியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வீடியோ ஒன்றில் தோன்றினார்.
ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்-யிடம் பேசிய அவர், இது முற்றிலும் அரசியல் விளையாட்டு என தெரிவித்துள்ளார்.