உக்ரைன் அஞ்சல் கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 6 ஊழியர்கள் பலி
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 6 அஞ்சல் ஊழியர்கள் பலியாகினர்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் 20 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. சண்டையை நிறுத்தும்படி ஒருபுறம் ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
Sergey Bobok / AFP
இந்த நிலையில், சனிக்கிழமையன்று வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உள்ள அஞ்சல் கிடங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் 6 அஞ்சல் ஊழியர்கள் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஊழியர்கள் Nova Poshta முனையத்திற்குள் இருந்த நிறுவனத்தின் ஊழியர்கள் என பிராந்திய ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'காயமடைந்தவர்கள் 19 முதல் 42 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களுக்கு துண்டு காயங்கள் மற்றும் குண்டு வெடிப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |