உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யக் குழந்தையே சிக்கிய துயரம்... வெளியாகியுள்ள புகைப்படம்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷ்யப்படைகள் திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய சிறுமி ஒருத்தியே சிக்கிய துயரம் நடந்தேறியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நிலையிலும், அந்நாட்டில் வாழும் ரஷ்யர்கள் இதுவரை நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களுடைய நிம்மதியை ரஷ்யாவே கெடுத்துள்ளது.
ஆம், ரஷ்யா நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் வீசியதில், இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அந்த குடியிருப்புகளில் ஒன்றில் வாழ்ந்து வந்த 37 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் மகளும் காயமடைந்துள்ளார்கள்.
உயிரிழந்த அந்த நபரின் குழந்தையின் பெயர் Zhenya. விடய என்னவென்றால், அந்த ஏழு வயதுக் குழந்தை ஒரு ரஷ்யக் குடிமகள்!
கட்டிட இடிபாடுகளின் நடுவிலிருந்து, மூக்கில் வழியும் இரத்தத்துடன், Zhenyaவை மீட்புக் குழுவினர் மீட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வரும் காட்சிகள் வெளியாகி, பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளன.
போர் எப்போதுமே இரு தரப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், தேவையில்லாமல் திடீரென உக்ரைனை ஊடுருவிய புடினுடைய அராஜகத்துக்கு இன்று ஒரு ரஷ்யக் குழந்தையே சிக்கியிருப்பது துயரம்தான்!