பரபரப்பான சந்தையில்... ரஷ்யாவின் கோர முகம்: உடல் சிதறி பலியான பலர்
உக்ரைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றில் பட்டப்பகலில் ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பான சந்தை தெருவில்
மிக அமைதியான நகரில் வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறார் உட்பட குறைந்தது 17 பேர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் அபூர்வமாக பட்டப்பகலில் பரபரப்பான சந்தை தெருவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது தாக்குதல் நடத்தப்பட்ட Kostyantynivka நகரம். சம்பவம் தொடர்பில் இதுவரை ரஷ்யா கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
Image: ZelenskyyUa
எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். சுமார் 33 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தையுடன் மருந்தகம் ஒன்றும் சில கடைகளும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் உக்ரைன் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என கூறுகின்றனர்.
Image: ZelenskyyUa
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |