தடுத்திட முடியாத தாக்குதலை நடத்துவோம்! பிரித்தானியா உட்பட உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானியா உடனான பதட்டங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் மாதம் கருங்கடலில் ரஷ்யா கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பிரித்தானயா போர்க்கப்பலை எச்சரிக்கும் விதத்தில் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாக ரஷ்ய தெரிவித்தது.
ஆனால், சம்பவம் தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட தகவலை பிரித்தானியா மறுத்தது, தங்கள் போர்க்கப்பலை எச்சரிக்கும் வகையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்தது.
எனினும், சில நாட்களுக்கு பின் ரஷ்ய நினைந்திருந்தால் பிரித்தானியா போர்க்கப்பலை மூழ்கடித்திருக்க முடியும் என எச்சரித்தார்.
இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு கடற்படை நாள் அணிவகுப்பில் பேசிய புடின், ரஷ்ய கடற்படை எந்தவொரு எதிரியையும் கண்டறிந்து தேவைப்பட்டால் தடுக்க முடியாத தாக்குதலை நடத்த முடியும் என எச்சரித்தார்.
நீருக்கடியில், தண்ணீருக்கு மேலே, வான்வழி எதிரிகளை கண்டறியும் திறன் ரஷ்யாவிடம் உள்ளது.
தேவைப்பட்டால், எதிரிகளுக்கு எதிராக தடுத்திட முடியாத தாக்குதலை நடத்துவோம் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.