ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போலி செய்தி..தேசத்துரோக குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி பிரமுகருக்கு 25 ஆண்டுகள் சிறை
ரஷ்யாவில் தேசத்துரோகம் மற்றும் போலி செய்தி குற்றச்சாட்டில், எதிர்க்கட்சி அரசியல்வாதியான காரா முர்சாவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்
காரா முர்சா ரஷ்ய ராணுவத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பியதாகவும், விரும்பத்தகாத அமைப்புடன் இணைந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
@Reuters: Joshua Roberts
மேலும், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக ஒரு மாநாட்டில் பங்கேற்றதற்காகவும், வெளிநாட்டில் நடந்த மூன்று பொது நிகழ்ச்சிகளில் போர்-எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்பாகவும் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
@Reuters
25 ஆண்டுகள் சிறை தண்டனை
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கில் தற்போது 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் காரா முர்சா தனது இறுதி உரையில், 'நான் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கிறேன், இன்றைக்கு நான் குற்றம்சாட்டப்பட்டேன். நான் எதற்காகவும் வருந்தவில்லை - நான் அதைப்பற்றி பெருமைப்படுகிறேன்' என தெரிவித்தார்.
பிறப்பால் ரஷ்ய குடிமகனான காரா முர்சா, தனது 15 வயதில் ஐக்கிய ராச்சியத்திற்கு தாயுடன் சென்ற பிறகு பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
@AP
@AFP