ரஷ்யாவில் பிராந்திய ஆளுநர் பதவி விலகல்! ஒரே வாரத்தில் ராஜினாமா செய்யும் இரண்டாம் நபர்
ரஷ்யாவின் சமரா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரி அசரோவ் பதவி விலகினார்.
தெற்கு ரஷ்யாவின் சமாரா பிராந்தியத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தவர் டிமிட்ரி அசாரோவ்.
இந்த ஆண்டு இறுதியில் ஆளுநர் தேர்தலுக்கு முன்னதாக, டிமிட்ரி அசாரோவ் (Dmitry Azarov) தற்போது பதவி விலகியுள்ளார்.
இதன்மூலம் இந்த வாரம் பதவி விலகும் இரண்டாவது பிராந்திய தலைவரானார். மேற்கு சைபீரியாவின் கான்ட்டி-மான்சி தன்னாட்சி மாவட்டத்தின் ஆளுநரான நடாலியா கொமரோவா பதவி விலகிய ஒருநாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டிமிட்ரி Vkontakte சமூக ஊடக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ உரையில், ''ஆளுநர் பதவியில் எனது பணியை முடிக்க நான் முடிவு செய்துள்ளேன்'' என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |