முதல் போர்க்குற்ற விசாரணை... ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
உக்ரைனில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர் சர்ஜென்ட் வாடிம் ஷிஷிமரின், பிப்ரவரி 28 அன்று வடகிழக்கு கிராமமான சுபகிவ்காவில், 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
ஷெலிபோவை சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகக் கூறினார். மட்டுமின்றி ஷெலிபோவின் விதவையிடம் மன்னிப்பும் கோரினார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுமட்டுமின்றி, உக்ரைனில் பல போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் படையெடுப்பின் போது தங்கள் துருப்புக்கள் பொதுமக்களை குறிவைத்ததை ரஷ்யா மறுத்துள்ளது, அதே நேரத்தில் ரஷ்ய துருப்புகளால் 11,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்திருக்கலாம் என்று உக்ரைன் கூறுகிறது.
சம்பவத்தின் போது 21 வயதான ஷிஷிமரின் மற்றும் பிற வீரர்கள் தங்கள் வாகனத் தொடர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அவர்கள் கைப்பற்றிய காரில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், ஷெலிபோவை குறிவைத்த ரஷ்ய துருப்புகள், ஷிஷிமரினிடம் அவரைக் கொல்ல கட்டளையிட்டது என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருமுறை மறுப்பு தெரிவித்த பின்னர், மிரட்டலுக்கு பயந்தே ஷிஷிமரின் துப்பாக்கியால் சுட்டதாக அவர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.