அவர்கள் கெஞ்சினார்கள் கதறினார்கள்... ஆனாலும் சுட்டுவிட்டேன்: தன் மனைவியிடம் பெருமை பேசும் ரஷ்ய வீரர்
உக்ரைனில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரஷ்யப்படையினரின் தொலைபேசி அழைப்புக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள் உக்ரைன் பாதுகாப்புப்படையினர்.
அவ்வகையில் தற்போது ஒரு ஒடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஒடியோவில், உக்ரைனிலிருக்கும் ஒரு ரஷ்யப் படைவீரர், Nastya என்று தான் அழைக்கும் தன் மனைவியிடம், தான் உக்ரைனில் செய்த அராஜகங்களைக் குறித்து தொலைபேசியில் விவரிப்பதைக் கேட்கலாம்.
ரஷ்யப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்த ரஷ்ய வீரர், தான் பொதுமக்களைக் கொன்று குவித்ததாக தன் மனைவியிடம் பெருமையடித்துக்கொண்டுள்ளார்.
அவர்கள் என்னிடம் கெஞ்சினார்கள், கதறினார்கள், ஆனாலும் நான் அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார் அவர்.
பதுங்கு குழிகளில் பதுங்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களை தான் கொன்று குவித்ததாக அந்த ரஷ்யப் படைவீரர் கூற, அவர் விவரிக்கும் பயங்கரங்களைக் கேட்ட அந்த பெண் ஒரு கட்டத்தில், பயந்து நடுங்கி, இப்படிப்பட்ட ஒருவருடன் நான் எப்படி இனி இணைந்து வாழமுடியும் என கேட்கும் அளவுக்கு அந்த ரஷ்யப் படைவீரர் தான் செய்த கொடூரங்களை விவரிக்கிறார்.
இந்த ரஷ்யர்கள் செய்யும் அராஜகங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
சமீபத்தில் ஒரு 41 வயது பெண்ணை வன்புணர்ந்திருக்கிறார் ஒரு 19 வயது ரஷ்யப் படைவீரர். அந்தப் பெண் எனக்கு ஒரு மகன் இருக்கிறான், அவனுக்கும் உன் வயதுதான் இருக்கும் என்று கூறி, தன்னை தாய் போல் நினைத்து விட்டுவிடும்படி கெஞ்ச, அந்த ரஷ்யரோ, என்ன செய்வது எனக்கு இரண்டு வாரங்களாக பெண்கள் யாரும் கிடைக்கவில்லை என்று கூறி அந்தப் பெண்ணை வன்புணர்ந்திருக்கிறார்.
அவரை சட்டத்துக்கு முன் கொண்டு நிறுத்தவேண்டும் என ஆவேசமாக கதறுகிறார் அந்தப் பெண்.
போர் தர்மம் என்றெல்லாம் பார்க்காமல் இந்த ரஷ்யா செய்யும் அராஜகச் செயல்களுக்கு எப்போது முடிவு வருமோ தெரியவில்லை...