அம்மா, உக்ரைனியர்களை சித்திரவதை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிய ரஷ்யப் படைவீரர்: தாய் சொன்ன திடுக் பதில்
அம்மா, உக்ரைனியர்களின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி சித்திரவதை செய்யும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தன் தாயிடம் கூறியுள்ளார் ஒரு ரஷ்யப் படைவீரர்.
அதற்கு அந்த தாய் சொன்ன பதிலைக் கேட்டால் திகைத்துப் போவீர்கள்...
இந்த ரஷ்யப் பெண்கள் பேசுவதைக் கேட்டால், இவர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களா என்று தோன்றுகிறது. ஒரு பெண் என்னவென்றால், நீங்கள் எத்தனை உக்ரைன் பெண்களை வேண்டுமானாலும் வன்புணருங்கள், ஆனால், என்னிடம் அதைக் குறித்து சொல்லாதீர்கள் என்றார்.
இப்போது ஒரு தாய் தன் மகனிடம் பேசிய ஒரு தொலைபேசி அழைப்பு குறித்த திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை, தங்களிடம் சிக்கிய அந்த தொலைபேசி அழைப்பின் இடம்பெறும் உரையாடலை பகிர்ந்துள்ளது.
அந்த அழைப்பில், Konstantin Solovyov (20) என்னும் ரஷ்யப் படைவீரர், தன் தாயாகிய Tatiana Solovyova (50)விடம், ரஷ்ய இராணுவம் கடைப்பிடிக்கும் பயங்கர சித்திரவதை முறைகள் குறித்து விவரிக்கிறார்.
அவற்றில் ஒன்று ’21 ரோஜாக்கள்’ என அழைக்கப்படுகிறது. பெயர் என்னவோ கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அதன் பொருள் என்னவென்றால், மனிதனின் கைகள் மற்றும் கால்களிலுள்ள 20 விரல்கள், மற்றும் அவனது ஆணுறுப்பு ஆகியவற்றின் மேலுள்ள தோலை அப்படியே ரோஜா இதழ்களை பிரிப்பது போல் பிரித்தெடுக்கும் முறையாகும்.
இது போலவே, இதற்கு மேல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல சித்திரவதை முறைகளை தன் தாயிடம் விவரித்த Konstantin, தானும் உக்ரைன் வீரர்களை கொடுமைப் படுத்தியதைக் குறித்து தன் தாயிடம் கூறுகிறார்.
அதைக் கேட்ட Tatiana என்ற அந்த பெண், அப்படி சித்திரவதை செய்ததை நீ என்ஜாய் பண்ணினாயா அல்லது ரசித்து செய்தாயா என்று கேட்கிறார்.
அதற்கு, Konstantin, எனக்கு அது பிடித்திருந்தது என்று கூறுகிறார். உடனே அவரது தாய், நான் அங்கே இருந்திருந்தால், நானும் அதை ரசித்திருப்பேன், நாமெல்லாரும் ஒரே மாதிரிதான் என்கிறார்.
தொடர்ந்து, தான் செய்ததைக் குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் Konstantin, ஒரு 20 உக்ரைன் வீரர்களைக் கொன்றபின் பரிதாப உணர்வு கூட போய்விட்டது என்கிறார். அவரது தாய் தொடர்ந்து அவரை உற்சாகப் படுத்துகிறார்.
ஆக, புடின் மட்டுமல்ல, அவரது ஆட்சியின் கீழ் உள்ள ரஷ்யர்கள் மன நிலைமையும் இப்படித்தான் இருக்குமோ என தோன்றுகிறது.
அதுவும், இந்த கொடூர ரஷ்யப் படைவீரர்களின் தாய்மார்களும் மனைவிகளும் பேசுவதைக் கேட்டால், அவர்கள் இவர்களை விட கொடூரமாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது.